JUST NOW : கலைமாமணி விருதை பெற்றுக்கொண்டார் விஜய் சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் வழங்கினார்.

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு உச்சத்தைத் தொட்ட நடிகர்களில் நடிகர் சியான் விக்ரம், அதற்கு அடுத்ததாக மிகவும் பேசப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி.

இவர் தற்போது விஜயின் 64வது திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துவருகிறார்.

அத்தோடு யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துவரும் அவருக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதில் தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகர் விஜய்சேதுபதி, சந்தானம், கவிஞர் யுகபாரதி, பின்னணி பாடகி ஜானகி ஆகியோர் விருதை பெறுவதற்கு வர முடியவில்லை.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் கவிஞர் யுகபாரதிக்கு கலைமாமணி விருதை வழங்கினார்.

நடிகர் சந்தானம் சார்பில் அவரது மேலாளரும், பின்னணி பாடகி ஜானகி சார்பாக அவரது மகனும் கலைமாமணி விருதை பெற்றுக் கொண்டனர்.

ஆனால் இந்தியாவில் அப்போது ஏற்பட்டிருந்த மதவாத அரசியல் காரணங்களுக்காக நடிகர் விஜய்சேதுபதி அந்த விருதினை வாங்க மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே