’காரணமே சொல்லாமல் நிறுத்தி விட்டார்கள்’ – பொருமும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பார்வையாளர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. அதில் வரும் கதாபாத்திரங்கள் ரசிகர்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு தற்போது ஒரு சோகமான விஷயம் நடந்துள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை வைஷாலி தனிகாவுக்கு பதிலாக தீபிகா என்பவர் மாற்றப்பட்டுள்ளது அனைவரும் தெரியும். இந்நிலையில் அதற்கான காரணத்தை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் வைஷாலி.

அந்த வீடியோவில், ’எல்லாரும் ஏன் பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலகிட்டீங்கன்னு கேக்குறாங்க. உண்மையிலேயே அதுக்கான காரணம் தெரியல. என் கிட்ட யாரும் எதுவும் சொல்லல. இதுக்கு மேல நான் அந்த காரணத்தை தெரிஞ்சுக்கவும் விரும்பல. ரொம்ப சின்னதா இருந்தாலும் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்துக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இப்போ நான் நடிச்சிட்டு இருக்க கோகுலத்தில் சீதை மற்றும் மகராசி ஆகிய சீரியல்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்க. சீக்கிரம் என்ன நீங்க விஜய் டிவி-ல பாப்பீங்க’ எனத் தெரிவித்திருக்கிறார் வைஷாலி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே