“தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டை சிலர் தொடர்ந்து வட்டமிட்டு வருகின்றனர்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரியில் இன்று (பிப்.25) மினி டைடல் பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர ஆரம்பித்து விட்டார். அவர் வருகையால் அவர்களது கூட்டணி கட்சிகளே பயப்படுகிறது. அவர்கள் எத்தனை முறை வருகிறார்களோ அத்தனை மடங்கு NDA கூட்டணி தோல்வி அடையும்” என்றார்.

