ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வழக்கு  தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி  சிபிஐயும் அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி அமலாக்கதுறையும் ப. சிதம்பரத்தை கைது செய்தது.

இந்த நிலையில் ஜாமின் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், வழக்கில் சிதம்பரம் முக்கிய பங்காற்றி இருக்கிறார் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

ஏற்கெனவே சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே