BREAKING : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் இடைக்கால ஜாமீன் கோரி தாக்குதல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் இருந்ததால் ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், உடல்நிலை பாதிப்பை குறிப்பிட்டு ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வயிற்று வலி பிரச்சனைகளால் ப.சிதம்பரம் அவதிபட்டு வருவதாகவும், வயிறு, குடல் சார்ந்த சிறப்பு மருத்துவம் சிதம்பரத்திற்கு தேவைப்படுவதாகவும் கூறினார்.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே