ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார்.

அவரது ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது.

வெளிநாடு செல்லத் தடை விதித்ததோடு, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ, ப.சிதம்பரம் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது வரும் 24-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அவருக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ வழக்கிலேயே அவருக்கு இந்த ஜாமீன் கிடைத்துள்ளது.

இதே வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவினரும் கைது செய்துள்ளதால், ஜாமீன் கிடைத்தும் சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவர இயலாத சூழலே உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே