இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்து மரணம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் 2 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தடையை மீறி ஊர் சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும் , அபராதம் விதித்தும் காவல் துறையினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மூணாறில் 144 தடையை மீறி சுற்றி திரிந்ததால் இளைஞர் விஜயபிரகாஷின் வாகனம் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதால் மனமுடைந்த அந்த இளைஞர் திடீரென போலிசாரின் கண்முன்னே தீக்குளித்தார்.

இச்சம்பவம் அங்கிருப்பவர்களை பதற்றப்பட வைத்தது. சிலர் அச்சத்தால் அங்கிருந்து ஓடினர்.

சில பொதுமக்கள் அவர் மீது எறிந்த நெருப்பை அணைத்து இளைஞரை கோட்டயம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . 

மருத்துவமனையில் அளித்த சிகிச்சை பலன் அளிக்காமல் இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் , சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே