உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் புழுக்கள்

சென்னை திருநின்றவூரில் உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருநின்றவூரில் செயல்படும் உணவகத்திற்கு சென்ற ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்து உள்ளார்.

அவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் இருந்த இறைச்சித் துண்டில் புழு இருந்ததை கண்டு அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உணவக நிர்வாகத்திடம் அவர் கேட்டபோது, முறையான பதில் வழங்காதலால், புழுக்கள் இருந்த உணவை வீடியோ எடுத்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தார்.

இது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே