எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் காட்டு யானை படுகாயம்..!!

கோவை மாவட்டம் வாளையாறு ஆற்றில் நீர் குடித்துவிட்டு வனத்திற்கு திரும்பிய காட்டு யானை மீது ரயில் மோதியது.

ரயில் மோதியதில் தலை, இடுப்பில் அடிப்பட்டு படுகாயம் அடைந்த காட்டு யானைக்கு 2 கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

யானைக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் பொக்லைன் மூலம் தூக்கி சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே