அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வரும் திங்களன்று ஆலோசனை நடத்துகிறார்.
மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பணிகள் குறித்து ஆலோசனையை பிரதமர் நடத்துகிறார்.
ஏற்கனவே மார்ச் 20, ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 11 ஆகிய தேதிகளில் 3 முறை பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில் ஏப்ரல் 11ம் தேதி நடந்த கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் நான்காவதாக நடக்க உள்ள ஆலோசனைக்கூட்டத்தில் மாநில அரசுகள் நிதி கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.