தமிழகத்தில் மருத்துவமனை வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை விபரம்

தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இன்று 27 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை, சுமார் 59 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இன்று மட்டும், 5978 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 33 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை, தமிழகத்தில் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. மேலும், இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக உள்ளது.

946 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இன்று அதிகபட்சமாக சென்னையில் 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குணமடைந்தவர்கள் பட்டியலை பார்க்கும் போது, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் கரூர் மருத்துவமனையில் இருந்து இதுவரை தலா 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அடுத்தபடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து 71 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

சென்னையில் உள்ள 4 மருத்துவமனைகளையும் சேர்த்து 152 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே