நெல்லை கண்ணன் சேலம் ஜெயிலுக்கு மாற்றப்பட்டது ஏன்??

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லையில் கடந்த 29 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார்.

இதனையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதையடுத்து பெரம்பலூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நெல்லை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நெல்லை கண்ணனை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் கோரிக்கைவிடுத்தனர்.

இதனால் வருகின்ற 13-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் முழு உடல் பரிசோதனை செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு அங்கு தகுந்த வசதிகள் இல்லை என்பதால் இன்று பிற்பகல் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டதால் நேற்று இரவு மதுரை சிறைச்சாலையில் இரவு முழுவதும் ஓய்வெடுத்து அதன் பின்பு இன்று காலை 9 மணி அளவில் மதுரையிலிருந்து அழைத்து வரப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

டிசம்பர் 13-ம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் சிறைக் காவலில் இருப்பார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே