தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளர்கள் ஜனவரி 3-ஆம் தேதி மதுரைக்கு வர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரையில் ஜனவரி 3-ஆம் தேதி ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆதரவாளா்கள் கூறும் முடிவுக்கேற்ப அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறினார்.
ஆதரவாளர்கள் கட்சி தொடங்கச் சொன்னாலும், தொடங்குவேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் ஆலோசனைக்கு ஆதரவாளர்கள் அனைவரும் வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.