கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் அரசு சந்தேகப்படுவது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி

சித்த மருத்துவர்கள், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறினார், சந்தேக பார்வையை விரிப்பது ஏன் என, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

திருத்தணிகாசலம் என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து, அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:

சித்த மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறினால் சந்தேக பார்வையை விரிப்பது ஏன்?

மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சந்தேகம் எழுப்புவது ஏன் சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தலாமே?

மத்திய மாநில அரசுகளால் சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டப்படுகிறது.

அனைத்து மருத்துவமனைகளிலும் அலோபதி என்ற பெயரில் கபசுர குடிநீர் கொடுத்து சித்த மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்படுகிறது. 

சித்த மருத்துவர்கள் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினாலே சந்தேகத்துடன் பார்க்கிறது.

நமது மருத்துவர்களுக்கு கட்டமைப்பு, பண உதவிசெய்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக எத்தனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளனரா?

ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, சித்தா வளர்ச்சிக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது.? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே