கொரோனா வைரஸ் காரணமாக ஜெர்மனியில் மூன்று மாதங்களாக சிக்கி தவித்த செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தாயகம் திரும்பி உள்ளார். இந்திய ஆவின் இந்தியாவின் செஸ் சாம்பியன்ஷிப் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற வருமான சென்னையைச் சேர்ந்தவர்.
விஸ்வநாதன் ஆனந்த் புண்டஸ்லீகா செஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றிருந்தார். கொரோனா வைரஸின் ருத்ர தாண்டவத்தால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மூன்று மாதமாக அங்கு தங்கி இருந்தார்.
இதன் பின்னர் ஜெர்மனியில் ஒரு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் தற்போது மூன்று மாதங்கள் கழித்து அங்கிருந்து நேற்று பெங்களூரு வந்தடைந்தார். இதன் பின்னர் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவரது வீட்டிலும் 14 நாட்கள் அவர் தனிமைப் படுத்தப்படுவார் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கார்த்திக் சுப்புராஜ் உடன் கேங்க்ஸ்டர் படத்தில் நடிக்கப்போகும் சியான் விக்ரம் நடிகர்!
- தோனியின் இடத்திற்கு சரியான வீரர் இவர்தான்! உத்தப்பா ஓபன் டாக்!