தோனி வெகு சீக்கிரத்தில் இந்திய அணியை விட்டு வெளியேறி விடுவார். இன்னும் சில மாதங்களில் ஓய்வு அறிவித்து விடுவார். அதற்கு பின்னர் இந்திய அணி அவருக்கு மாற்றாக ஒரு மிகச் சிறந்த வீரரை தேர்வு செய்யவேண்டும்.
தற்போது ரிஷப் பன்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் டோனியின் இடத்தை நிரப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா ஒரு இளம் வீரர் ஒருவரை கை காட்டி அவர் தான் இந்திய அணியின் அடுத்த தோனி என்று பேசியுள்ளார்.
இவரது பெயர் ரியாம் பராக். அஸாமை சேர்ந்த இவருக்கு 18 வயதாகிறது. சென்ற வருடம் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 160 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதிரடியாக ஆடக்கூடியதிலும் வல்லவர். இதன் காரணமாக இவரை தோனியின் இடத்திற்கு முயற்சி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார் ராபின் உத்தப்பா.