குடியை கெடுக்கும் மசோதாவே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
மே17 இயக்கம் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற உள்ளிட்ட வழக்குகளில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியை கெடுக்கும் மசோதாதான் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பது தொடர்பாக திமுக நீதிமன்றத்தை மட்டுமே நாடியது என்றும்; தேர்தல் ஆணையத்தை மிரட்டவில்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.