தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படும் என தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமானது.
ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் சூரிய உதயம் முதல் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும்.
30-வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
அதன்படி, சனிக்கிழமை பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிறை தெரியாததால் திங்கட்கிழமை ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது.