தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குணமடைந்தார் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த நபர் குணமடைந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

டெல்லி நபரின் ரத்த மாதிரிகளை 2 முறை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை.

இன்னும் 2 நாட்களில் டெல்லியை சேர்ந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது.

இதனிடையே நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்தார். 

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை வழங்கினார்.

அவர் கொரோனாவுக்கு எதிராக விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என மக்களுக்கு பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு எனவும் கூறினார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த நபர் குணமடைந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, டெல்லியில் இருந்து பயணம் செய்து கொரோனா பாதிக்கப்பட்டு RGGH-ல் சிகிச்சை பெற்ற நபர் நன்றாக குணமடைந்து வருகிறார்.

அடுத்தடுத்த இரண்டு கட்டாய சோதனைகளுக்குப் பிறகு அவருக்கு கொரோனா தோற்று இல்லை என அறிவிக்கப்படுகிறார்.

அவர் 2 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே