TNPSC முறைகேட்டில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் : அமைச்சர் ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குற்றவழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை உள்ள சித்திபுத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

முன்னதாக கோவியில் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அரசியல் வியூகங்களை வகுத்து தருபவரான பிரசாந்த் கிஷோரை திமுக ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறி, அதுபற்றி விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே