தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி மீண்டும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிந்த பிறகு தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, கொடைக்கானலில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசுக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் அமெரிக்காவின் ஆம்வே நிறுவனம் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது.