நாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

அஜித் பட இயக்குநரின் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நாயகனாக நடிக்கிறார்.

சரவணனுக்கு  ஜோடியாக அறிமுக நாயகி கீர்த்திகா திவாரி நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்.

புரொடக்‌ஷன் நம்பர் 1 என்ற தற்காலிக பெயரில் பூஜையுடன் இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தை ஜேடி -ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர்.

இவர்கள் ஏற்கெனவே உல்லாசம், விசில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் முக்கிய கதபாத்திரங்களில் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகர் படத்துக்கு வசனம் எழுதுகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே