“இமயமலை பயணம் நன்றாக இருந்தது” – ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பினார்.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஐந்து நாட்கள் ஆன்மிக பயணமாக ரஜினிகாந்த் கடந்த 13ஆம் தேதி இமயமலைக்குச் சென்று இருந்தார்.

ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அவர் வழிபாடு செய்தார்.

தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ரஜினிகாந்த் சென்னைக்கு திரும்பினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இமயமலை பயணம் நன்றாக இருந்ததாக கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே