2021 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் மிகப் பெரிய அதிசியத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற 50வது சர்வதேச விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.
சென்னை விமானநிலையத்தில் ரஜனிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த விருதுக்கு காரணம் தமிழக மக்கள் தான். இந்த விருதை தமிழக மக்களுக்கு சமர்பிக்கிறேன் என்றார்.
கமலும் நீங்களும் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளராக இருப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தேர்தல் நடக்கும் நேரத்தில், அப்போது உள்ள சூழ்நிலையை பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு. கட்சி ஆரம்பித்த பின் அனைவருடன் ஆலோசித்து அதுக்குறித்து முடிவெடுக்கப்படும். அதுவரை அதைப்பற்றி பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார்.