ஜூலை 1 முதல் 15 வரை நடக்க CBSE இருந்த தேர்வுகள் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வுகள் ரத்து என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் நாடு முழுவதும் பெரும்பாலான பள்ளித் தேர்வுகள், கல்லூரி தேர்வுகள், போட்டித் தேர்வுகள் என ரத்து செய்யப்பட்டுவிட்டன.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் கொரோனா பேரிடர் பாதிப்பு அதிகரித்ததால் ஒரு சில தேர்வுகள் மட்டுமே நடத்தப்படாமல் இருந்தது.
இந்த தேர்வுகளை ஜூலை 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது.
இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை கான்வில்கார் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது.
அதில் ஊரடங்கால் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த முடியாது என தமிழகம், ஒடிஸா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எங்களிடம் தெரிவித்துள்ளன.
அது போல் மற்ற மாநில அரசுகளிடம் இருந்தும் கருத்துகளை பெற்ற நிலையில் சிபிஎஸ்இ 10, 12 தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்ய முடிவு செய்யப்படுகிறது என மத்திய அரசு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.