மக்கள் தீர்ப்பை தலை வணங்கி அதிமுக ஏற்றுக் கொள்கிறது : ஓ.பன்னீர் செல்வம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்று கொள்வதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்துக்கொண்டு இருக்கின்றன என்றும்; தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் மக்கள் தீர்ப்பை தலை வணங்கி அதிமுக ஏற்றுக் கொள்கிறது என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே