காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீரமரணம்

ஹந்த்வாராவில் நடந்த தாக்குதலில் கர்னல், மேஜர் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பதிலடித் தாக்குதலில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

வட காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், பயங்கரவாதிகள் திடீரென பதுங்கியிருந்து தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதற்கு பதிலடி தரும் வகையில் பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான தாக்குதலில், கர்னல் ஒருவர், ராணுவ உயரதிகாரி மற்றும் ராணுவ வீரர்கள் என மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் ராணுவம் இணைந்து ஈடுபட்ட தாக்குதலில், ஹந்த்வாராவின் சங்கிமுல்லா பகுதியில் நுழைந்து குடிமக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தியபின் தீவிரவாதிகளின் மீதான தாக்குதலைத் தொடங்கியதாக இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே