தேனி அருகே தனியார் மசாலா நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
தேனி அருகே கோடாங்கிபட்டியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஈஸ்டர்ன் மசாலா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இந்த நிறுவன குடோனில் மசாலா பொருட்களுக்கான மூலப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான மசாலா மூல பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தீ வேகமாக பரவியதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் சிரமம் அடைந்தனர்.