2019-ஆம் ஆண்டு நிறைவு பெற்று அடுத்து 2020-ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் 6-ஆம் தேதி காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார்.
கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து வருகின்ற 6-ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறை சம்மந்தமான பிரச்சனைகள் குறித்தும், மானிய கோரிக்கைகள் குறித்தும் பல விவாதங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.