மகளிருக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய – நியூசிலாந்து அணிகள் விளையாடின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்தது.
தொடக்கத்தில் களமிறங்கிய சபாலி வர்மா 46 ரன்கள் எடுத்தார்.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
46 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட சபாலி வர்மாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
இந்திய அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றிகண்டுள்ளதால் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.