ஞாயிற்றுக்கிழமை தீபாவளி; சனி, திங்கள் வேலை நாட்கள் என அறிவிப்பு

தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமையும், தீபாவளிக்கு பிந்தைய நாளான திங்கள்கிழமையும் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை ஒரு நாள் தான் என்ற போதிலும் அதற்கான ஏற்பாடுகள், சந்திப்புகள் என இரண்டு மூன்று நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நீடித்திருக்கும்.

இந்த ஆண்டு இம்மாதம் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளும், பிந்தைய நாளும் வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வேலை பார்ப்பவர்கள், அவர்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று வர முடியுமா?? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே