இன்று இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ராஜபக்சே

இலங்கை பிரதமர் ராஜபக்சே, 5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

இலங்கையில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அவரது மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான மஹிந்த ராஜபக்சே, பிரதமராக பதவியேற்றார்.

அதிபராக பதவியேற்ற கோத்தபயா, தன் முதல் வெளிநாட்டு பயணமாக, நவம்பரில் இந்தியா வந்தார்.

அப்போது, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் அரசுமுறை பயணமாக ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார்.

டெல்லியில் அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

வரும் 11ம் தேதி வரை இந்தியாவில் இருக்கும் ராஜபக்சே, வாரணாசி, சாரநாத், புத்த கயா, திருப்பதிக்கும் செல்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே