நாட்டின் தலைநகரை தன்னகத்தே கொண்டிருக்கும் டெல்லியில், ஆட்சியைப் பிடிப்பதற்காக மும்முனைப் போட்டியை ஏற்படுத்தியிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர கண்காணிப்புப் மேற்கொள்ளப்படுகிறது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு, நாளை நடைபெறும் தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் வரும் 11 ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி, பா.ஜ.க , காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நேற்று மாலையுடன் முடிவடைந்த இறுதிக்கட்ட பரப்புரையில், பாஜக சார்பில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரசின் ராகுல் காந்தி, ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே