எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப் படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது, ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ஸ்வீட்டர் என்பவரின் விசைபடகை பறிமுதல் செய்ததோடு 11 மீனவர்களையும் கைது செய்தனர்.

பின்னர் கங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே