தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு!

தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று ஓம் நமச்சிவாய முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான தஞ்சை பெரிய கோயிலில் 1996ம் ஆண்டு கடைசியாக குடமுழுக்கு நடைபெற்றது.

இதையடுத்து 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி காலை 5 மணிக்கு தொடங்கி 7.20 மணி வரை 8ம் யாக சாலை பூஜை நடைபெற்றது.

பின்னர் திருக்கலசங்கள் எழுந்தருளலும், அதையடுத்து 9. 20 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜ கோபுரங்களுக்கு குடமுழுக்கும் நடைபெற்றது.

அப்போது தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச் சிவாயா என்று பக்தி கோசம் எழுப்பி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

குடமுழுக்கு விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தஞ்சைக்கு லட்சகணக்கானோர் வந்திருந்தனர்.

அவர்கள் கோயிலிலும், தஞ்சையின் பல்வேறு பகுதியில் இருந்தும் வழிபாடு நடத்தினர்.

குடமுழுக்கு விழாவையொட்டி, தஞ்சை பெரிய கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பெரியகோயில் குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே