மாஸ்டர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் தர தயார் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

பொங்கலன்று வெளியாகவிருக்கும் மாஸ்டர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க தயாராக இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ திரைப்படம், ஓடிடியில் வெளியாகப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஆனால், ஓடிடியில் வெளியிடப் போவதில்லை தியேட்டரில் தான் வெளியிடுகிறோம் என படக்குழு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இந்த நிலையில் மாஸ்டர் ரிலீஸ் குறித்து கடம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, பொங்கலுக்கு வெளியாகும் விஜய்யின் மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தர தயாராக இருப்பதாகவும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் அரசு பரிசீலித்து அனுமதி அளிக்கும் என்றும் கூறினார்.

மேலும் மாஸ்டர் படத்தை தியேட்டர்களில் வெளியிடவிருக்கும் மாஸ்டர் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்த அமைச்சர், 2ஜி வழக்கு தொடர்பாக திமுகவினர் விவாதிக்க வேண்டிய இடம் அமலாக்கத்துறை தான் என்றும்; அரசியலுக்காக முதல்வருக்கு சவால் விடுகிறார் என்றும் 2ஜி வழக்கில் இருந்து முதலில் ராசா வெளிவரட்டும் என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே