இளையராஜாவுக்கு சபரிமலை சன்னிதானத்தில் ஹரிவராசனம் விருது!

இசைஞானி இளையராஜாவுக்கு, சபரிமலை சன்னிதானத்தில் வைத்து ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கு கேரள அரசு ஆண்டுதோறும் ஹரிவராசனம் விருதை வழங்கி வருகிறது.

விருது பெறுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும். 2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது இசைஞானி இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

“வணக்கத்துக்குரிய இசைஞானி” என்ற பட்டமும் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கங்கை அமரன், சித்ரா உள்ளிட்டோரும் இதற்கு முன்னர் ஹரிவராசனம் விருதினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே