புயல் தூள் தூளாகி விடும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இயற்கைப் புயலோ, செயற்கைப் புயலோ முதல்வர் வகுக்கும் வியூகங்களில் புயல் தூள் தூளாகி விடும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘நீர் மேலாண்மைத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தியமைக்கு விருது பெற்றுள்ளோம். இயற்கைப் புயலோ, செயற்கைப் புயலோ முதல்வர் வகுக்கும் வியூகங்களில் புயல் தூள் தூளாகி விடும். 

புரெவி புயல் காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மாவட்டங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன

தண்ணீர் வருமா என எதிர்பார்த்த மதுரை மக்களின் கண்ணீர் முல்லைப்பெரியாறு திட்டத்தால் துடைக்கப்பட்டுள்ளது.

அம்ரூட் குடிநீர் திட்டத்தால் கடைகோடி மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே