சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வந்த காலகட்டத்தில் அதற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறினார் சித்த மருத்துவர் தணிகாசலம்.

சுகாதாரத்துறை அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் தகவல்கள் பரப்புவது The Epidemic Diseases Act and Regu- lations பிரிவு 8-ன்படி தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தணிகாசலத்தை கடந்த மே மாதம் 6 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். 

அத்துடன் மக்களிடம் கொரோனா சிகிச்சை செய்வதாக பணம் பறித்ததாக கூறி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தனது மகன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில் சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கொரோனாவுக்கு மருந்து, முதல்வர் குறித்து வீடியோ வெளியிட்ட இவர் மீதான குண்டர் சட்டத்தை நீதிமன்றம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே