கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம் – ராணுவத்தை தயார் நிலையில் இருக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவத்தை அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத் தலைநகரான மினினபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கறுப்பினத்தை சேர்ந்த ஒருவரை கைவிலங்கிட்டு, காருக்கு அடியில் படுக்கவைத்து, அவரின் கழுத்தின் மேல் பொலிஸார் ஒருவர் முழங்காலை வைத்து அழுத்துவது போன்ற காணொளி சமீபத்தில் வெளியானது.

இந்த காணொளியில் , சுமார் 8 நிமிடங்கள், முழங்காலால் அழுத்தப்பட்டதால், வலி தாங்காமல், ஜார்ஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டு கிளம்பியது .

தொடர்ந்து வன்முறை போராட்டங்கள் அதிகரித்து வருவதால் மின்னபொலிஸ் நகருக்கு ராணுவத்தை அனுப்ப பென்டகன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ராணுவ பொலிஸை தயார் நிலையில் வைக்கும்படி அதிபர் ட்ரம்ப், பென்டகனுக்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே