18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜூன் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும்.
ஆந்திரா(4), குஜராத்(4), ஜார்க்கண்ட்(2), மத்திய பிரதேசம்(3), மணிப்பூர்(1), மேகாலயா(1), ராஜஸ்தான்(3) ஆகிய இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்.
மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் அன்றே மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.