நித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..! சீமான் அதிரடி

நித்தியானந்தாவை தனது ரோல்மாடல் என்று அறிவித்துள்ள சீமான், அவரை போல 200 கோடி ரூபாய் கொடுத்து 20 தீவுகளை வாங்கி, ஆங்கில கலப்பின்றி பேசும் தூய தமிழர்களை அங்கு குடி அமர்த்த போவதாக தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் இணையதள பாசறை தம்பிகள் மத்தியில் கட்சியின் எதிர்கால திட்டம் குறித்து விவரித்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , நித்தியானந்தாவை தனது ரோல் மாடல் என்றும் அவரை பின்பற்றி 200 கோடி ரூபாய் செலவில் 20 தீவுகளை விலைக்கு வாங்கி அங்கு தூய தமிழர்களை குடி அமர்த்த போவதாக தெரிவித்தார்

ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் தமிழர்களுக்கு, தான் ஆட்சிக்கு வந்ததும் அடி இருக்கு என்றும் சீமான் எச்சரித்தார்.

ரஜினியை இழிவாக பதிவிடுவது தவறு என்று கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறிய சீமான், நடிகர் ரஜினிகாந்த் மீது அளப்பரிய மரியாதை வைத்திருப்பதாகவும், அவர் கர்நாடகம் அல்லது மராட்டியத்தில் சென்று கட்சி தொடங்கினால் அவரை வாழ்த்தி பேச தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே