குரூப்-1 தேர்வில் இடம்பெற்ற “பரியேறும் பெருமாள்” திரைப்படம்..!!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் – 1 முதல்நிலை தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள உயரிய பொறுப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்றது.

அதில், கடந்த 2018-ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதேபோல சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நூல் பற்றியும் கேள்வி இடம் பெற்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே