வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் சென்னை செளகார்பேட்டையில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அரங்க பஞ்சமி என அழைக்கப்படும் ஹோலி பண்டிகை பங்குனி மாதம் வரும் பெளர்ணமி நாளில் கொண்டாடப்படுவது வழக்கம்.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் சகோதரத்துவத்தை பறைசாற்றும் விதமாகவும் கொண்டாடப்படும் இப்பண்டிகை, சென்னை செளகார்பேட்டையில் களைகட்டியது.
தெருக்களில் திரண்ட இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.