இறுதிகட்ட கிளினிகல் சோதனை நடத்தாமலேயே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

உள்துறைக்கான நாடாளுமன்ற குழு தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஆனந்த் சர்மா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்த வினாவை எழுப்பினார்.

இந்த ஒப்புதல், தேவையான சட்டவரைமுறைகளை மீறி முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறை கூறினார்.

இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே