தனி ஒருவராக கல்வி புரட்சி செய்து வரும் கர்நாடகாவைச் சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரி பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
![](https://i0.wp.com/www.tamilexpressnews.com/wp-content/uploads/2020/01/Padmasri-Award-Winning-Orange-Fruit-Dealer2.jpg?resize=800%2C600&ssl=1)
தனி ஒருவராக கல்வி புரட்சி செய்து வரும் கர்நாடகாவைச் சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரி பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹஜப்பா, சந்தையில் ஆரஞ்சு பழங்களை விற்பனை செய்து வருகிறார்.
![](https://i0.wp.com/www.tamilexpressnews.com/wp-content/uploads/2020/01/Padmasri-Award-Winning-Orange-Fruit-Dealer1.jpg?resize=800%2C457&ssl=1)
ஆரஞ்சு விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு, அரசு மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் அதே பகுதியில் உள்ள மசூதியில் 1999-ம் ஆண்டு ஆரம்ப பள்ளியை கட்டினார்.
ஹஜப்பாவின் தொடர் முயற்சியால் அந்த பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
![](https://i0.wp.com/www.tamilexpressnews.com/wp-content/uploads/2020/01/Padmasri-Award-Winning-Orange-Fruit-Dealer.jpg?resize=800%2C457&ssl=1)
பள்ளியை கட்டியதோடு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு ஹஜப்பாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.