ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. தொடர்ந்து திஹார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்திற்கு சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் வழங்கப்பட்டாலும் அமலாக்கத்துறை காவலில் ப.சிதம்பரம் உள்ளதாக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. ப.சிதம்பரத்தின் அமலாக்கத்துறை காவலும் நாளை நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே