கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பொருளாதார நடவடிக்கையை கருத்தில் கொண்டு நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சுகாதார நடவடிக்கை தொடர்கின்றன. அதோடு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி என உரிய வழிமுறைகளை பொது மக்களும் கடைப்பிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து, நாம் வெளியே வரும்போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம், ஆபத்தாகி விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பொருளாதார நடவடிக்கையை கருத்தில் கொண்டு நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சுகாதார நடவடிக்கை தொடர்கின்றன.
அதோடு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி என உரிய வழிமுறைகளை பொது மக்களும் கடைப்பிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.