வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பதாக ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில் தேர்வு ஒத்திவைப்பதாக ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இளம் மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என ஹர்ஷவர்தன் தெரிவித்தார். 

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நேற்று மத்திய அரசு சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாகவும்; 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே