நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
வெலிங்டனில் நடைபெறும் போட்டியில் முதல்நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கியதும் இந்திய அணி வீரர்கள், நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.
ரிஷப் பந்த் 19 ரன்கள், ரகானே 46 ரன்கள், ஷமி 21 ரன்கள், இஷாந்த் ஷர்மா 5 ரன்கள் எடுக்க அஸ்வின் மற்றும் பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்,
நியூசிலாந்து தரப்பில் சவுத்தி, ஜேமிசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்தது